Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் திரு.அலோசியஸ் கிறிஸ்டோபர் அவர்களுக்கு பாராட்டு விழா ICI ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து திரு.சண்முக சுந்தரபாண்டியன் தலைமையில் பணி நிறைவு பெறும் நடைபெற்றது. வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் திரு.ராமச்சந்திரன் வரவேற்றார்கள்.
மேலும் இவ்விழாவில் திரு.ஜான் பிரிட்டோ, திரு.குருசாமி, திரு.முத்துலிங்கம், திரு. சந்திரசேகர் போன்ற வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டுகளை வழங்கினார்கள். மாவட்ட பொருளாளர் திரு.மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து மகளிர் வட்டார கல்வி அலுவலர்களும் திறம்பட செய்திருந்தனர். ஏற்புறையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தனது பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய வட்டார கல்வி அலுவலர்களுக்கும், பாராட்டுகளும், வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொண்டார்கள்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் APO திரு. சீவலமுத்து, திரு.தயாளன் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர், திரு.சுடலை, திரு.சார்லஸ் போன்றோர் பாராட்டுகளை வழங்கி கௌரவித்தார்கள்.